தமிழகத்தில் இன்று
சர்-வ-தே-ச அரங்-கில் அசிங்-கப்-ப-டுகிற--து பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டேஇஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தூதர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மூன்று ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன.
பாகிஸ்தானின் தூதர்களை ஏற்க மறுத்த நாடுகள் இத்தாலி, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகியவை ஆகும். மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனில்உறுப்பினர்களாக உள்ளன.
இத்தாலி நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முஸ்தபா அன்வர் ஹூசைன், ஸ்வீடனின் தூதராக வைஸ் அட்மிரல் ஷாமூன் அலிகான், பெல்ஜியம் தூதராக ஏர் மார்ஷல் முகம்மது நஜீப் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மூன்று தூதர்களையும், எந்தக் காரணமும் கூறாமல்நிராகரித்து விட்டன.
பாகிஸ்தானில் உள்ள ராணுவ ஆட்சி மீது மூன்று நாடுகளும் அதிருப்தியில் உள்ளதையே இது காட்டுவதாக தெரிகிறது.
மூன்று தூதர்களும் நிராகரிக்கப்பட்டதையடுத்து ஸ்வீடனுக்கு ஏற்கனவே இருந்த நயீம் உல் ஹசனும், பெல்ஜியத்திற்கு டெல்வியும் தொடர்வார்கள் என்றுபாகிஸ்தான் கூறியுள்ளது. இத்தாலியிலிருந்து ஆரிப் அயூப் மாற்றப்பட்டு விட்டார்.
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியில் உள்ள நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை தூதர்களாக ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனமல்ல என்றுஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.