கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கோவை மதக் கலவரம்: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவையில் நடந்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த கொலைகள் தொடர்பாககைதான 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை குனியத்முத்தூரைச் சேர்ந்தவர் டைலர் சண்முகம். இவர் கடந்த 1997-ம்ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில்அதிகாலையில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இதே ஊரைச் சேர்ந்த பாபு என்ற சுதீர், அக்பர் அலி, அப்துல் காதர், சாகுல்அமீது, பஷீர், காஜா உ சேன், யூசுப் ஆகியோர் அடங்கிய கும்பல் சரமாரியாகசண்முகத்தை வெட்டிக் கொலை செய்தது.
விநாயகர் சதூர்த்தியின்போது இந்தக் கொலை நடந்தது. கொலை தொடர்பாகபோத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் திங்கள்கிழ தீர்ப்புவழங்கப்பட்டது. ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொக்கலிங்கம்தீர்ப்பு வழங்கினார். யூசுப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரைவிடுதலை செய்து தீர்ப்பளித்தார்.