தமிழகத்தில் இன்று
நடிகர் பார்த்திபன் கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நடிகர் பார்த்திபனை பார்க்க அனுமதி மறுத்ததால் அவரது கார் கண்ணாடியை உடைத்த ரசிகரை போலீஸ் கைதுசெய்தனர்.
நடிகர் பார்த்திபனின் அலுவலகம் சென்னை கே.கே.நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வாலிபர்ஒருவர் அங்கு வந்து நடிகர் பார்த்திபனைப் பார்க்க வேண்டும் என்றார்.
அலுவலகத்தில் மானேஜர் சின்னசாமி மட்டுமே இருந்தார். அவர் பார்த்திபன் அலுவலகத்தில் இல்லை என்றுகூறினார். இதனால் அந்த வாலிபர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பிய அவர் மீண்டும் பார்த்திபனைப் பார்க்க வேண்டும் என்றார். ஆனால் பார்த்திபன்இல்லாததால் மானேஜர் சின்னசாமி அவர் இல்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர் அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விலையுயர்ந்த கார்கண்ணாடிகளை உடைத்தார். அந்த நேரம் அங்கு நடிகர் பார்த்திபன் வந்தார். உடனடியாக அவரும்,மானேஜருமாகச் சென்று அந்த வாலிபரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
வாலிபரின் பெயர் முருகேசன் (32) என்றும் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகபுரத்தைச்சேர்ந்தவர் என்றும், முன்பும் இதேபோல, இயக்குநர் பாலச்சந்தரின் கார் கண்ணாடியை உடைத்த "அனுபவம்பெற்றவர் என்றும் தெரிய வந்தது.