தமிழகத்தில் இன்று
சாவு வீட்டில் விஷச் சாராயம் அருந்திய 2 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மன்னார்குடி:
தமிழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே, சாவுக்குப் போன வீட்டில் விஷச்சாராயம் குடித்ததில் 2 பேர் இறந்தனர்.
மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான். இவரது தாயார் 15 நாட்களுக்கு முன் இறந்தார். இதற்காக சனிக்கிழமை ஈமச்சடங்கு நடந்தது.இந்தச் சடங்கில் அவரது உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஈமச்சடங்கு முடிந்த பின் விருந்து நடந்தது. அதற்குப்பின் சாராயம் அருந்தினர். சாராயம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது. வயிற்றுவலியால் துத்தனர். சிலருக்கு வலிப்பும் வந்தது.ஏற்பட்டது.
10 பேர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். அவர்கள் உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும்பலனின்றி தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சண்முகம் என்பவரும், ரத்தினம் என்பவரும் இறந்தனர். 8 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது.
சாராயம் என்ற பெயரில் விஷச்சாராயத்தைக் கொடுத்தது தொடர்பாக ஜெயபால் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஜெ.கண்டனம்: விஷச் சாராயத்திற்கு 2 பேர் இறந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கருணாநிதி ஆட்சியில்கள்ளச்சாராயம் வெள்ளமாய் ஓடுகிறது. ஆங்காங்கே விஷச்சாராயச் சாவுகள் விழுகின்றன. மன்னார்குடி அருகே விஷச்சாராயம் குடித்தவர்கள் பலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது வேதனைக்குரியது.
கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றபோது கள்ளச்சாராயப் பானைகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயும் என்று வீர வசனம் பேசினார். ஆனால் மாநிலம்முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொழில்போல் நடக்கிறது. கருணாநிதியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்கமுடியவில்லை.
மன்னார்குடியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க அரசு உத்தரவிடவேண்டும். கருணாநிதி ஆட்சியில் கள்ளச்சாராயம்ஆறாய்ப் பெருகி ஓடுவதையும், அதனால் ஏற்படும் பலியையும் வன்மையாய்க் கண்டிக்கிறேன் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications