கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
புதன்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. ரிசல்ட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் புதன் கிழமை வெளியாகின்றன. அன்றே மாணவர்கள் தங்கள்மதிப்பெண்களைப் பள்ளிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதினர். விடைத்தாள்திருத்தும் பணி நடைபெற்ற போது, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியைஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்தனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிட வேண்டும் என்று அரசுத்தேர்வுத் துறை முயற்சி எடுத்தது. அதன்படி 21-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றனஎன்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் பரமசிவன் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கிலோ-இந்திய பள்ளிகளின் இறுதி வகுப்பு, மெட்ரிக்குலேஷன் தேர்வு முடிவுகள்புதன்கிழமை காலை வெளியிடப்படும். பகல் 12 மணி முதல் இன்டர்நெட்டில் மதிப்பெண்களுடன்முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் பகல் 12 மணி முதல் மதிப்பெண் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்றார் அவர் பரமசிவன்.