For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புலிகளின் திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சாவு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கையில், கிழக்குத் திரிகோணமலை மாவட்டத்தில் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 5வீரர்கள் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இலங்கை ராணுவத் தரப்பில் கூறுகையில், திரிகோணமலை நகருக்கு தென்கிழக்கே ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மறைந்திருந்த விடுதலைப் புலிகள் திடீர் என சரமாரியாக அவர்களைநோக்கிச் சுட்டனர். இதில் ஐந்து ராணுவ வீரர்கள் அங்கேயே இறந்தனர். நான்கு பேர்காயமடைந்தனர்.

அப்பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக தீவிரதேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில்தீவிர தாக்குதலில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள் தற்போது அங்கு அமைதியாகஇருந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, கிழக்குப் பகுதியில் தங்களது கவனத்தைத்திருப்பியுள்ளனர்.

இதனால் கிழக்கு மாகாணத்தில் ராணுவம் தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X