For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

போலீஸ் வீடியோகிராபரைத் தாக்கவில்லை: கோவை எம்.பி. மறுப்பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

போலீஸ் வீடியோகிராபரையோ, இன்ஸ்பெக்டரையோ நான் தாக்கவில்லை என கோவை நாடாளுமன்ற பாஜகஉறுப்பினர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

கோவையில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த பாரதீய ஜனதா தொண்டரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டஎம்.பி. ராதாகிருஷ்ணன் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித் தொண்டர் சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டார். இவர்மீது கடந்த 98-ம் ஆண்டு முதல் இதுவரை 10 வழக்குகளைப் போலீஸார் தொடுத்துள்ளனர். போலீஸ் கமிஷனரின்வற்புறுத்தலின் பேரில் அவரது குடும்பத்தினரைத் துன்புறுத்தி, சோமசுந்தரம் மது அருந்திவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர்.

அப்பாவி மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் கோவை போலீஸ் கமிஷனரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.சவ ஊர்வலத்தை வீடியோகிராபர் படம் பிடிப்பதை நிறுத்தும்படி அருகில் இருந்த இன்ஸ்பெக்டரிடம் கூறினேன்.அதற்கு அவர் போலீஸ் கமிஷனரிடம் பேசுமாறு என்னிடம் கூறினார். நான் வீடியோகிராபரையோ,இன்ஸ்பெக்டரையோ அடிக்க இல்லை.

பொதுமக்களில் சிலர் வீடியோகிராபரைப் பிடித்துக் கீழே தள்ளியதில் வீடியோ காமிரா உடைந்துள்ளது. போலீஸ்கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுமென்றே வீடியோ படம் எடுக்கவிட்டு குழப்பத்தை ஏற்படுத்ததிட்டமிட்டுள்ளார். போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துடன்தொடர்பு கொண்டு பேசுவேன் என்றார் ராதாகிருஷ்ணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X