தமிழகத்தில் இன்று
பிரேசில் குழந்தைகள் காப்பகத்தில் தீ: 12 குழந்தைகள் கருகிச் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ரியோடிஜெனிரோ:
பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோ நகரில், குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர்.
உருகயானா என்ற இடத்தில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று பரவிகொழுந்து விட்டு எரிந்து குழந்தைகள் இருந்த அறை முழுவதும் பரவியது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல் 12குழந்தைகள் கருகினர். இறந்த குழந்தைகள் அனைவரும் 1முதல் 3 வயதிற்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் ரேனாட்டோ போர்ட்டோலோசி கூறுகையில், தீவிபத்திற்கானகாரணம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதும் காப்பாற்றுவதற்கும், முதலுதவிசெய்வதற்கும் ஆட்கள் செல்லவில்லை.
சம்பவம் நடந்தபோது, காப்பகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications