தமிழகத்தில் இன்று
-கோ-வை பார--தி-ய ஜன-தா எம்.-பி. கைதா-கி-ற-ார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலீஸ் வீடியோ கிராபர் மற்றும் அரசு அதிகாரிகளைத் தாக்கியதாக பதி-வு செய்-யப்-பட்-ட வழக்-கில் கோவை பார-தி-ய ஜன-தாகட்-சி-யின் எம்.பி. ராதாகிருஷ்ணன் கை-து செய்-யப்-ப-ட-லாம் -எ-ன்-று தெரி-கி-ற--து.
அவர் மீ-தும் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் 56 பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கோவையில் நேற்று ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர் சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டார்.இவரது இறுதிச் சடங்கைப் போலீஸ் வீடியோகிராபர் பங்கஜ் குமார் படம் எடுத்தார்.
இறுதிச் சடங்கைப் படம் எடுக்கக் கூடாது என எம்.பி.,ராதாகிருஷ்ணன் உட்பட கட்சித் தொண்டர்கள் மற்றும் உறவினர்கள்ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதனையும் மீறிப் படம் எடுத்த போலீஸ் வீடியோகிராபரை சிலர் தாக்கி, காமிராவைஉடைத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் லிங்கப்பனையும் சிலர் தாக்கினர். இதையடுத்து இருவரும்கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்-டின் பொதுச் சொத்தைச் சேதப்படுத்துதல் (ஜாமீனில் வெளியே வர- முடியாத பிரிவு 3 ), அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (இந்திய தண்டனைச் சட்டம் 353), சட்ட விரோதமாகக் கூடியிருத்தல், கலைய மறுத்தல் (இ.த.ச 143), சட்டவிரோதமாகக் கூடுதல் (இ.த.ச 147), பணியில் உள்ள அரசு ஊழியரைத் தாக்கிக் காயப்படுத்துதல் (இ.த.ச பிரிவு 332, 323, 332,506 (2))ஆகிய பிரி-வு-க-ளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications