"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்

Subscribe to Oneindia Tamil

டான்சி ஒப்பந்தமா!, "நான் பத-வி-யி-லே-யே இல்-லை-ய"

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு விற்க, விற்பனை ஒப்பந்தம் மேற்கொண்ட போதுதான் அந்த இருநிறுவனங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரிய வந்தது.

டான்சி ஒப்பந்தத்துக்கு முன்பே நான் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன் என்று முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப் மூன்றாவது தனிநீதிமன்றத்தில்தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி நில பேர ஊழல் வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது முன்னாள் முதல்வர் ஆசிப் எனக்குத் தமிழ் தெரியாது எனது வக்கீல் வரகாலதாமதமாகும். எனவே மற்றவர்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் நான் வாக்குமூலம் அளிக்கிறேன் என்றார்.

பின்னர் ஒ-ரு வழி-யாய் முகமது ஆசிப் வாக்குமூலம் அளித்தார். அவருக்குத் தமிழ் தெரியாது என்பதால் நீதிபதியின் கேள்வியை அவரது வக்கீல் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்து சொன்ன பிறகு பதில் கூறினார்.

அதற்குப் பின் முகமது ஆசிப் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.

டான்சி நிலத்தை அதிக விலைக்கு கேட்ட ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசிஎன்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் விற்க டான்சி வாரியமும், டான்சிதுணைக்குழுவும் ஒருமனதாக அனுமதியளித்தது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்குச் சொந்தமான பொருட்களை விற்றாலோ, அரசுக்குப் பொருட்கள் வாங்கினாலோ முதல்வரின் அனுமதி பெறவேண்டும் என்ற அரசாணை குறித்த விபரம் எதுவும் தெரியாது.

இந்த விற்பனை தொடர்பான கோப்பில் அந்த அரசாணை பற்றிய குறிப்பு எதுவும் வைக்கப்படவில்லை. இந்தக்கோப்பில் , டான்சிவாரியம், துணைக்குழு,துறைச்செயலாளர்கள் ஆகியோர் அனுமதியளித்த பின்னர் நான் கையெழுத்திட்டு நிதித்துறைக்கு அனுப்பினேன்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசிஎன்டர்பிரைசஸ் நிறுவனங்களின் விற்பனை ஒப்பந்தம் நடந்தபோது தான் அந்நிறுவனங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பற்றிதெரிய வந்தது. இந்த இரு விற்பனை ஒப்பந்தம் முடியும் முன்னரே நான் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

என் மீது வழக்கு தொடர கவர்னர் அளித்துள்ள அனுமதி செல்லத்தக்கதல்ல. மத்திய வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் தமிழக வக்ப் வாரியத்தின் தலைவராகஇருந்த என் மீது வழக்கு தொடர வேண்டுமானால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அரசின் விரோதம் காரணமாக என் மீது இந்த வழக்குதிணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் டான்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் நான் நியாயமாக பாரபட்சமின்றிஎனது பணிகளை ஆற்றினேன். இந்த டான்சி நிறுவனத்தின் சொத்துக்களை ஜெயாபப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதுதொடர்பாக நான் யாருக்கும் ஆதாயமாக எந்த ஒரு தருணத்திலும் செயல்பட்டது கிடையாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+