தமிழகத்தில் இன்று
"மோச-டி" காசோலைகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம்: சிஐ-ஐ கேட்--கி-ற-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வரும் காசோலைகள் (செக்) குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றுஇந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) அர-சுக்-கு யோச-னை தெரி-வித்-துள்-ள-து.
1881-ம் ஆண்டு உருவான சட்டப் பிரிவு 138ன்- படி இந்தக் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சிஐஐதெரிவித்துள்ளது.
பொதுவாய் முதன்மை நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் அதிகமான வேலைப்பளு இருப்பதால் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வரும்காசோலைகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலை மாறவேண்டுமெனில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்று சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வரும் காசோலைகள் குறித்த வழக்குகள் உடனடியாய் விசாரிக்கப்பட வேண்டும். இப்படிச்செய்தால்தான் நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் காலதாமதமின்றி விரைவில் விசாரணைக்கு வரும்.
சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் பணமில்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு காசோலைக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைநீதிமன்ற கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சிஐஐ கூறி-யுள்-ள-து.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications