குடும்பத்துக்கும் நாட்டுக்கும் அவமானம் தேடித் தந்துவிட்டே---னே - குரோனியே வேத--ன
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியதன் மூலம் எனது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும்,நாட்டுக்கும் அவமானம் தேடித் தந்துவிட்டேன் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ஹான்சி குரோனியே தெரிவித்தார்.
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதி எட்வின் கிங் விசாரணைக் கமிஷனால் குரோனியேவிசாரிக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை நடந்த குறுக்கு விசாரணையைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் விசாரணை தொடர்ந்தது.விசாரணையின்போது குரோனியே கூறியதாவது:
மேட்ச் பிக்ஸிங்குக்காக கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் எனக்குக் கொடுத்த பணம், நான் செய்வது தவறு என்றுநினைக்கவிடாமல் செய்துவிட்டது. சூதாட்டக்காரர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட நான் பின்னால்ஏற்படப்போகும் சம்பவங்களை நினைத்துப் பார்க்கவில்லை.
முதன்முதலில் என்மீது குற்றம் சாட்டப்பட்ட ஏப்ரல் 7-ம் தேதி வரை உண்மையில் நான் பெரிய நெருப்புடன்விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணரவில்லை. லஞ்சம் வாங்கியதன் மூலம் எனக்கும், எனதுகுடும்பத்துக்கும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும், தென் ஆப்பிரிக்க நாட்டுக்கும் பெரிய அவமானத்தைத்தேடித் தந்துவிட்டேன்.
நான் செய்த தவறை நினைத்து இப்போது வருந்துகிறேன் என்றார் குரோனியே.












Click it and Unblock the Notifications