தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்சனை இன்-று -தீ-ரு-மா?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வெலிங்க்டன்:
பிஜியில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரியும், 30அமைச்சர்களும் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என்று ரேடியோ செய்தி ஒன்று தெரிவித்தது.
பிஜியில் கடந்த 19 ம் தேதி புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரிமற்றும் 30 அமைச்சர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
பிஜியில் இந்தியர் பிரதமராக நீடிக்கக் கூடாது. தலைநகர் சுவாவில் அங்குள்ள வம்சாவழியினர் கொண்டஇடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் புரட்சிக்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து பிஜியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்தினருக்கும், புரட்சிக்காரர்களுக்குமிடையேபிஜி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படலாம் என்றுநியுசிலாந்தில் உள்ள ரேடியோ செய்தி ஒன்று தெரிவித்தது.
அச்செய்திக்குறிப்பு இதுகுறித்துக் கூறுகையில், வியாழக்கிழமை பிற்பகல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படலாம்.அவர்கள் விடுவிக்கப்பட்ட பின் மருத்துவப் பரிசோதனைக்காக சுவாவில் செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்குஅழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அந்த ரேடியோ செய்தி தெரிவித்தது.
யு.என்.ஐ.