தமிழகத்தில் இன்று
தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்கின்றனர் இலங்கை முஸ்லீம்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர மாட்டோம் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கும் இடம் உண்டு. எனவே அவர்களும் எங்களோடுசேர்ந்து போராட வேண்டும்என சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள்தரப்பிலிருந்து சமீபத்தில் அறிக்கை வெளியானது. இது முஸ்லீம்கள் மத்தியிலும்,இலங்கை அரசு மத்தியிலும் குழப்பதை ஏற்படுத்தியது.
பிறருடைய ஆதரவைக் கோரும் அளவுக்கு விடுதலைப் புலிகள் பலவீனமானவர்கள்அல்ல என்பதால் புலிகளின் திடீர் அறிக்கைக்குக் காரணம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் புலிகளின் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தர முடியாது என இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களுமான அஷ்ரப், இஸ்புல்லா ஆகியஇருவரும் இதுகுறித்துக் கூறுகையில், தமிழ் ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.துவக்கத்திலிருந்தே இலங்கை முஸ்லீம்கள் தமிழ் ஈழத்தை எதிர்த்து வருகிறார்கள்.இலங்கை சிதறுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறினர்.
வடகிழக்கு மாகாணக் கவுன்சில் திட்டம் குறித்து எங்களது கட்சித் தலைவர்களின்ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் கருத்துச் சொல்ல முடியும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த முஸ்லீம்களை, விடுதலைப் புலிகள்அங்கிருந்து வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில் பெரும்பாலோர்இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.