For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை கிறிஸ்தவ சர்ச்சில் தீ

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லை:

திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டையில் புதன்கிழமை மாலை கிறிஸ்தவ ஆலயத்தில் தீப்பிடித்தது. இங்குபெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் சிஎஸ்ஐ டயோசீசனுக்குச் சொந்தமான நல்மேய்ப்பர் தேவாலயம் உள்ளது.இங்கு கிறிஸ்தவ ஆலயம் தற்காலிகமாக ஓலைக் கூரையில் இயங்கி வருகிறது. புதன்கிழமை பிற்பகல் அங்குகட்டுமானப் பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்கு குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. அங்குள்ள கூரை முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.காற்று வேகமாக அடித்ததால் தீ அப்பகுதி முழுவதும் பரவியது.

உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கடும் போராட்டத்துக்குப்பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஆலயத்தில் உள்ள மேஜைகள், சேர்கள், பரிசுத்த பொருட்கள் உள்பட சுமார் இரண்டரை லட்சம்பொருட்கள் எரிந்து சாம்பலாயின. முதலில் தீப்பிடித்த இடத்தில் நான்கு பாட்டில்கள் கிடந்தன. அவற்றில்பெட்ரோல் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வெடித்ததால் தீப்பிடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X