தமிழகத்தில் இன்று
"ஓஷோ" ரஜ்-னீஷ் ஆஸ்ரமத்தில் பிளவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புனே:
"ஓஷோ" ரஜனீஷின் ஆஸ்ரமத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஓஷோ நியமித்த கமிட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிஒரு கமிட்டியை ஓஷோ எதிர்ப்பாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
புனேயில் ஓஷோ ரஜனீஷின் ஆஸ்ரமம் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தை நிர்வகிக்கவும், எந்த முக்கிய முடிவைஎடுக்கவும் 21 பேர் கொண்ட -உள்-வட்-டக் குழுவை ஓஷோ ஏற்படுத்தினார்.
இந்த கு-ழு-வை எதிர்த்-துக் கொண்-டு -இ--தி-லி-ருந்-து பிரிந்து வந்த 15 பேர் தனி-யே ஒ-ரு கு-ழுவை -ஏற்-ப-டுத்-தி-யுள்-ள-னர்.இது தொடர்பாக இந்-த போட்-டிக் குழுவின் முக்கிய உறுப்பினரான யோகா நீலம் என்-ற -பண் கூறியதாவது:
ஆஸ்ரமத்தை நிர்வகிக்க 21 பேர் கொண்ட குழுவை ஓஷோ ஏற்படுத்தினார். குழு உறுப்பினர்கள் அனைவரையும்ஓஷோவே தேர்ந்தெடுத்தார். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் வாழ்நாள் வரை அவர்கள் அக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், அதுவரை அவர்களை நீக்கக்கூடாது என்றும் அவர்களுக்குப்பதிலாக வேறு யாரையும் நியமிக்கக்கூடாது என்றும் ஓஷோ அறிவித்துவிட்டார்.
ஆனால், அக் குழுவின் தலைவர், துணைத் தலைவர், செயலர் ஆகியோரின் செயல்பாடு மோசமாக உள்-ள-து.மூவரும் சர்-வா-தி-கா-ரத்-து-டன் செயல்--ப-டு-கின்-ற-னர். இதனால், குழுவிலிருந்து 15 உறுப்பினர்கள் பிரிந்து வந்து புதியகுழுவை ஏற்படுத்தியுள்ளோம்.
இக் குழுவின் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள் கொள்கை முடிவு எடுப்பார்கள். மற்றவர்கள் அக் கொள்கைமுடிவுகளைச் செயல்படுத்துவார்கள் என்றார் நீலம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications