தமிழகத்தில் இன்று
முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு ஊழியர்கள் மாற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவில் பணியாற்றிய 23 ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த தனிப்பிரிவு. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.
முதலில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கி வந்தது. பின்னர் இது செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் கீழ் வந்தது. மக்கள் குறைக்களாகஅமைக்கப்பட்ட இந்தப் பிரிவில் குளறுபடிகள் நுழைய ஆரம்பித்தன.
முதல்வருக்காக அனுப்பப்பட்ட மனுக்கள் அவருக்கு உடனடியாகச் செல்லாமல் இடைத்தரகர்கள் மூலம் அவருக்குக் கிடைத்தன. இந்தப் பிரிவின்செயல்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதியும் அதிருப்தியில் இருந்தார்.
இதற்கிடையே இந்தத் துறையில் உள்ள 23 ஊழியர்களையும் உடனடியாய் வேறு துறைக்கு மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications