தமிழகத்தில் இன்று
ரயிலில் கலாட்டா செய்த கர்நாடக விவசாயிகள் மீது தடியடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாகர்கோவில்:
சென்னை-கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யாமல் ஏறி கலாட்டா செய்த கர்நாடக விவசாயிகளைப் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மதுரையில் நடந்த விவசாயிகள் மாநாட்டிற்காக 2000 க்கும் மேற்பட்ட கர்நாடக விவசாயிகள் மதுரைக்குச் சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் திரும்பி கன்னியாக்குமரிக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டு ஊர் திரும்புகையில் முன்பதிவு செய்யாமல் சென்னை-கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
முன்பதிவு செய்த பயணிகள் அங்கு வந்ததும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகள் போலீசில் புகார்கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் விவசாயிகளை அங்கிருந்து இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களைக் கலைத்து விட்டனர்.
போலீசாரின் நடவடிக்கையில் ஆத்திரமடைந்த அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைத்து விட்டனர். இப் பிரச்சனையினால் அங்கு ரயில் போக்குவரத்துசுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications