தமிழகத்தில் இன்று
--கு-விந்-து கிடக்-கும் அதிகாரங்கள்: ஜார்ஜ் பெர்-னாண்-டஸ் வ-ருத்-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜாம்நகர் (பீகார்):
மகாத்மா காந்தி கண்ட கிராம சுயராஜ்யத்தை அடைய வேண்டுமானால், அடிமட்ட அளவிலிருந்து அதிகாரப் பகிர்வை அமல்படுத்த வேண்டும் என்றுமத்திய பாதுகாப்பபு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
சமதாக் கட்சியின் சார்பில் நடக்கும் இரண்டு நாள் தேசிய கருத்தைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
50 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுற்ற சுதந்திரப் போராட்டத்தின் நோக்கம், இலக்கிலிருந்து நாம் வெகுதூரம் விலகி வந்து விட்டோம். சுதந்திரப்போராட்டத்தின் மையக் கருத்தே, கிராம சுயராஜ்யம் அமைய வேண்டும் என்பதுதான்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு துரதிர்ஷ்டவசமாக தேசந் தந்தை மகாத்மா காந்தி நம்முடன் இல்லை. இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டம்உருவானபோது, மத்திய, மாநில அரசுகள் என்ற அடிப்படையிலேயே சட்டம் உருவாக்கப்பட்டது.
அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு வசம் அபரிமிதமான அதிகாரங்கள் உள்ளன. மத்தியஅரசுநினைத்தால் ஒரு மாநில அரசையே கலைத்து விட முடியும்.
அதேபோல, ஒரு மாநில அரசு நினைத்தால், பஞ்சாயத்து, நகர் பாலிகா போன்ற உள்ளூர் நிர்வாக அமைப்புகளைக் கலைத்து விட முடியும். இந்த நிலை மாறவேண்டும். அதிகாரப் பகிர்வு அடிமட்ட அளவிலிருந்து வர வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications