தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஒரே நாளில் 6 பெண்கள் தற்கொலை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சென்னை மாநகரில் வெள்ளிக்கிழமை மட்டும் 6 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் இருவர்மாணவிகள். இவர்கள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

தூக்குப் போட்டும் தீயில் குளித்தும் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் விவரம்:

கோகிலா (வயது 15). பெரம்பூரை சேர்ந்த இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாகக்கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டுக் கொண்டார்.

சசிகலா (வயது 16). பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம் லூர்துபுரத்தைச் சேர்ந்த இவரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்தோல்வி அடைந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.

ஜெயமாலா (வயது 32). சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த இவருக்கு செவ்வாய் தோஷம் காரணம்திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இவரது ஜாகத்தைப் பார்த்த ஜோசியர், திருமணம் நடக்கவாய்ப்பே இல்லை என்று கூறியதாகவும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தீக்குளித்து இறந்தார்.

மாலா (வயது 24). நந்தனம் சந்தியா நகரைச் சேர்ந்த இவர், பெற்றோரை விட்டுப் பிரிந்து காதலனுடன் வசித்துவந்தார். ஆனால், வேறு ஒரு பெண்ணுடன் காதலன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர்தீக்குளித்து இறந்தார்.

தேவி (வயது 27). கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது கணவனுக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால்கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், வாழ்க்கையில்ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தீக்குளித்து இறந்தார்.

ராஜகுமாரி (வயது 25). காசிமேட்டைச் சேர்ந்த இவரது கணவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால்,கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல்ஏற்பட்டு தீக்குளித்து இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+