தமிழகத்தில் இன்று
நண்-ப-ரா? ப-கை-வ--ரா?: தி-மு-க-வை கு-ழப்-பு-ம் டாக்-டர் ராம-தாஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் தி-முக கூட்டணியில் பாமக நீடிக்கும் என்று அக்கட்சியின் -நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜன-நாயகக் கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தாலும், அடிக்கடி தி-முகவையும்,அதன் தலைமையையும் விமர்சித்து வருபவர் டாக்டர் ராமதாஸ். அதோடில்லாமல் இலங்கைப் பிரச்னை போன்ற விஷயங்களில்எதிரணியான அதி-முகவுக்கு அவர் வேண்டுகோள் விடுப்பதையும் வாடிக்கையாக்கி வருகிறார்.
வாழப்பாடி ராமமூர்த்தியோடு ஏற்பட்டுள்ள மோதலில் ---தி-மு-க தலை-வர் முதல்வர் -க-ரு-ணா-நி-தி மீது தனிப்பட்ட கோபம் ராமதாசுக்குஉண்டு. இருவருக்கும் இடையிலான சண்டையில் வாழப்பாடி பக்கம் முதல்வர் இருப்பதாக ராமதாஸ் கருதுகிறார்.அதனடிப்படையில் தான் "என்னை திட்டுவதற்கென்றே வாழப்பாடி போன்றவர்களை கருணா-நிதி தன் வசம் வைத்துள்ளார் என்றுபகிரங்கமாக பேசி வருகிறார்.
விடுதலைப் புலிகள் விஷயத்திலும் அவர் திமுகவுக்கு வேண்டுமென்றே தர்மசங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார். புலிகளைஆத-ரிப்பவர்கள் மா-நாட்டை -முதல்வர் கூட்ட வேண்டும் என்பது ராமதாசின் லேட்டஸ்ட் கோ-ரிக்கை. இதைப் பற்றிய கேள்விக்குபதில் சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்-நிலை வருமே என்ற பயத்தில் தான், சென்னையில் வெள்ளிக்கிழமைசெய்தியாளர்களை சந்திக்க -முதல்வர் கருணாநதி மறுத்து விட்டார்.
தனது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து -முன்று மணி -நரம் ஆலோசனை -நடத்திய -முதல்வர்கருணா-நிதி, அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் ராமதாஸ் திமுக கூட்டணியில் -நிலைப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தேர்தல் -நரத்தில் அணிமாறிவிடுவார் என்ற பேச்சு இப்போதே அடிபடத் துவங்கி விட்டது. இதை -முதல்வர் கருணா-நிதியும் உணர்ந்திருக்கிறார் என்பதுசென்னையில் வெள்ளிக்கிழமை -நடைபெற்ற தி-முக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு தெளிவுபடுத்துகிறது.
மூப்பனாருக்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்து பேசியுள்ளதும், தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும் என்று தமது கட்சியினருக்குஉறுதியளித்துள்ளதும் இதுற்கு எடுத்துக்காட்டு. இச் சூழ்நிலையில் -முதல்வ-ரின் மனஓட்டத்தை உணர்ந்து கொண்ட ராமதாஸ்--முந்திக் கொண்டதாக தெ-ரிகிறது.
பாமக -நிலை பற்றி எழுந்துள்ள சந்தேகத்திற்கு தற்காலிகமாக -முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அடுத்த தேர்தலிலும் திமுககூட்டணியில் பாமக நீடிக்கும் என்று மதுரையில் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் அளித்த பேட்டி:
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிப்போம். தி-முக கூட்டணியில் வி-ரிசல் ஏற்படும் கா-ரியங்களில் பாமகஇதுவரை இறங்கியதில்லை. இனிமேலும் இறங்காது. -மூன்றாவது அணியில் ஒருபோதும் பாமக சேராது.
அதிமுக தலைவர்கள் யாரும் என்னை சந்தித்துப் பேசவில்லை. ஒரு அணியில் இருக்கும்போது இன்னொரு அணியில் சேருவதுபற்றி யோசிக்க மாட்டோம். எங்களது தகுதிக்கு தகுந்தாற்போல் திமுகவிடம் தொகுதிகள் கேட்போம். ஆனால், ஆட்சியில் பங்குகேட்கமாட்டோம்.
2001ல் பாண்டிச்சேரியில் பாமக ஆட்சியை பிடிக்கும். அப்போது தமிழ்நாட்டில் இரண்டாவது பெ-ரிய கட்சியாக பாமக வரும்.2006ல் தமிழ்-நாட்டிலும் ஆட்சியை பிடிப்போம். ஆட்சியில் இருக்கும் கட்சி, பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில்போட்டியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் ராமதாஸ்.