தமிழகத்தில் இன்று
20 ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரஜினி காந்த்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நடிகர் ரஜினி காந்த், 20 ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்கிறார்.
ஆண்டுதோறும் 20 ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பதைகடந்த நான்கு ஆண்டுளாக நடிகர் ரஜினி காந்த் செய்து வருகிறார். இதுவரை 60பெண்களுக்கு இப்படித் திருமணம் செய்து வைக்கிறார்.
மாவட்ட ரசிகர் மன்றங்கள் மூலம் இந்த ஆண்டுக்கான ஏழைப் பெண்களைத் தேர்வுசெய்யும் பணி நடந்தது. இதில் மாவட்டத்திற்கு ஒரு ஜோடி வீதம் 20 ஏழை ஜோடிகள்தேர்வு செய்யப்பட்டனர்.
ஜூலை 12-ம் தேதி இவர்களுக்கு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 10.30க்குள் திருமணம் நடக்கிறது.ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைகிகன்றனர்.
திருமணம் செய்து வைக்கப்படும் ஒவ்வொரு தம்பதிக்கும் தலா ரூ. 1 லட்சம் செலவுசெய்யப்படுகிறது. மண மகளுக்கு பட்டுச் சேலை, ரவிக்கை, இரண்டரை பவுன் தாலி,மண மகனுக்கு பட்டுவேட்டி, கைக்கடிகாரம், செயின், சீர்வரிசை பாத்திரங்கள்,செலவுக்கு ரூ. 5 ஆயிரம், ஒவ்வொரு தம்பதி வீட்டிலிருந்தும் 50 பேர் சென்னை வந்துபோக ஆகும் செலவு, விருந்து ஆகியவை இந்த செலவில் அடங்கும்.
திருமண ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா செய்துவருகிறார்.