தமிழகத்தில் இன்று
என்ன செய்யப் போகிறது நார்வே?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
வட கிழக்கு மாகாண இடைக்கால கவுன்சில் அரசில் விடுதலைப் புலிகளுக்கு இடம் தரமுடியாது என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பிடிவாதமாகஇருப்பதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே குழுவுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக அரசியல்நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இடைக்கால கவுன்சிலில் விடுதலைப் புலிகள் இடம் பெறாவிட்டால் அது செயல்படுவது மிகவும் கடினம் என்று பல தமிழ்க் கட்சிகள் கருத்துத்தெரிவித்துள்ளன. வட கிழக்கு மாகாண நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளும் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், அது வெற்றி பெறாது என்றுஅரசியல் நிபுனர்கள் கூறியுள்ளனர். இப்போது இல்லாவிட்டாலும், பிறகாவது விடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சிலில் சேர்க்க வேண்டும்.
புலிகளுக்கு இடமில்லை என்ற தனது நிலைக்கு பெருமளவில் எதிர்ப்புக் கிளம்புவதை உணர்ந்த அதிபர் சந்திரிகா, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டுஜனநாயகப் பாதைக்கு விடுதலைப் புலிகள் திரும்பினால், அவர்களை அரசில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழேபோட்டு விட்டு இடைக்கால கவுன்சில் அரசில் சேருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது.
விடுதலைப் புலிகளை இடைக்கால கவுன்சில் அரசில் சேர்க்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழ்ஈழ விடுதலை இயக்கம் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
என்ன செய்யப் போகிறது நார்வே?
இதற்கிடையே, அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வே நிலை மிகவும் கடினமானதாக மாறியிருக்கிறது.
தனது நிலையில் சந்திரிகா பிடிவாதமாக இருப்பதால், வரும் வாரங்களில் நார்வே நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் கடினமானதாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நார்வே மட்டுமல்லாது, இலங்கைப் பிரச்சினையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியுள்ளஇந்தியாவுக்கும் கூட இலங்கை அதிபரின் போக்கு ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.
இதற்கிடையே, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களில் அரசுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சுயேச்சையான தேர்தல் கமிஷன், போலீஸ் கமிஷன், அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவை அமைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாக ஐலண்ட்நாளிதழலில் செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், ஜூலை மத்தியில் இலங்கை அமைதி உடன்பாடு குறித்த திட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications