"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
ஜவுளித்துறை இயந்திரங்களை நவீனமயமாக்க அமைச்சர் அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
ஏற்றுமதி சவால்களைச் சமாளிக்கவும், பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் ஜவுளித்துறை இயந்திரங்களை நவீனமயாக்கவும் மில்கள் முன்வர வேண்டும் என மத்தியஜவுளித் துறை அமைச்சர் காசிராம் ராணா தெரிவித்தார்.
சேலத்தில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் நடத்தும்இரண்டு நாள் கருத்தரங்கைத் துவக்கி வைத்து காசிராம் ராணா பேசியதாவது:
எதிர்காலத்தில் ஜவுளித் துறையில் சவால்கள் உருவாகி வருகின்றன. இதனை சமாளிக்கஜவுளித் துறையில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களின் தரத்தை மேம்படுத்தும்சூழ்நலையில் உள்ளோம்.
தற்போது உற்பத்தியாகி வரும் நூலின் தரம் மிகவும் குறைந்துள்ளது. இதன் தரத்தைசர்வதேச அளவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மேலும்,விலையில் ஏற்பட்டுள்ள போட்டியையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
எனவே, ஜவுளித் துறை மேம்பாட்டு நிதியை அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.இதனால் இயந்திரங்களை நவீனமயமாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் துணி ரக நூலிழைகளில் 53 சதவீதம் விசைத் தறிகளில்உற்பத்தியாகின்றன.
இந்தியாவில் மில்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. இவைஏற்றுமதிக்குத் தடையாக உள்ளன.
குறிப்பாக அடிக்கடி மின் தடை, மின்சாரக் கட்டண உயர்வு, தேவையான, போதுமானஅடிப்படை வசதிகள் இன்மை, எளிதான வர்த்தகக் கொள்கையின்மை, தரமற்றபொருட்கள் உற்பத்தி, வெளிநாடுகளில் இந்தியத் துணி வகைகளை இறக்குமதி செய்யஉள்ள தடங்கல் ஆகிய பிரச்னைகளால் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதைஅறிந்துள்ளேன். இவற்றைக் களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்என்றார் ராணா.
விழாவில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி, பெரியார் பல்கலைக்கழகத்துணைவேந்தர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications