For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

By Staff
Google Oneindia Tamil News

இத்தாலி, போர்ச்சுகல் சுற்றுப்பயணத்தைத் துவக்கினார் வாஜ்பாய்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக இத்தாலி மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பிச் சென்றார்.

இந்தியாவுக்கும், இத்தாலி, மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்குமிடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் வகையில்இவரது சுற்றுப்பயணம் இருக்கும்.

வாஜ்பாயுடன், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் செல்கிறார். முதலில் இந்தியக் குழு இத்தாலி செல்கிறது. அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இத்தாலியில் நாங்கள் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்துப் பேச இருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தாலிய நாட்டின் முதலீடுமுக்கிய பங்காற்றுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான உறவினை பலப்படுத்தும் வகையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம்என்றனர்.

இத்தாலியில் இரண்டாம் போப் ஆண்டவர் போப் ஜான் பாலை பிரதமர் வாஜ்பாய் சந்தித்துப் பேசுவார்.

கடந்த வருடம் போப் ஆண்டவர் இந்தியா வந்திருந்தபோது பிரதமரை சந்தித்துப் பேசியதாகவும், தான் இத்தாலி செல்லும்போது அவரை நேரில் சென்றுசந்தித்து பேசப்போவதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் வாஜ்பாய் 27 ம் முதல் 29 ம் தேதி வரை போர்ச்சுகலில் உள்ள லிஸ்பனில் இருப்பார். அங்கு ஜூன் 28 ம் தேதி நடக்கும் பொருளாதாரம்,வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இந்த மாநாட்டினால் உறவு பொருளாதார உறவு வலுப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

பிரதமருடன் நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்ஆகியோரும் செல்கிறார்கள்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X