"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வருகை குறைவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இந்த ஆண்டு குறைந்த அளவிலான அகதிகளேவந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும்,ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்அகதிகளாக தமிழர்களுக்கு வருகின்றனர்.
1983 -ம் ஆண்டிலிருந்து கடந்த மே மாதம் வரை 2 லட்சத்து 77 ஆயிரம் பேர்அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இதில் 95-ம் ஆண்டு வரை 99 ஆயிரம் பேர்அகதிகளாக திரும்பியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டிலும், ஒரிஸ்ஸாவிலும் உள்ள 129முகாம்களில் 66 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் மொத்தம் 486 அகதிகள்தான் இந்தியாவந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1315 பேர் அகதிகளாகவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதிகளுக்கு இருப்பிடம், பண உதவி, உடைகள், ரேஷன் அரிசி,பாத்திரங்கள் மற்றும் மருத்துவ உதவி வழங்கிய வகையில், இந்தியாவுக்கு இதுவரை230 கோடி செலவாகியுள்ளது. 2000- 2001-ம் ஆண்டின் பட்ஜெட்டில் 30 கோடிரூபாய் அகதிகள் பராமரிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.