மேட்ச் பிக்ஸிங்கா....ஆள விடுங்க சார்!...ராபின் நழுவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மேட்ச் பிக்சிங் பற்றி மட்டும் கேட்காதீர்கள் என நழுவினார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ராபின் சிங்.
கோயம்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 42 வது ஆண்டு விழா கோவையில் நடந்தது.
நிகழ்ச்சியில், ராபின் சிங் கலந்து கொண்டு பேசுகையில், கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற வேண்டுமானால், கடுமையான பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். அதோடு குறிக்கோளுடன் செயல்பட்டால் லட்சியத்தை அடைய முடியும். மேலும் தன்னம்பிக்கைதான் வெற்றிக்கு அடிப்படையாகஅமைகிறது என்றார்.
விழாவிற்கு சங்கத் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராபின்சிங் பரிசளித்தார்.
பின்னர் நிருபர்களின் வற்புறுத்தலின் பேரில் பதிலளித்த ராபின்சிங், மேட்ச் பிக்சிங் கேள்வி மட்டும் வேண்டாம், விளையாட்டைப் பற்றிக் கேளுங்கள்சொல்கிறேன் எனக் கூறினார்.
இதனையடுத்து அவர் கூறும்போது, நான் வேகத்தோடும், உற்சாகத்துடனும் விளையாடிக் கொண்டுள்ளேன். இதற்குக் காரணம் நான் அடிப்படையில் பெற்றபயிற்சிதான். ஒரு நாள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகமாக விளையாடி வருகிறேன். கிரிக்கெட் போர்டு அனுமதித்தால் டெஸ்ட் மேட்ச் களிலும்விளையாடத் தயராக உள்ளேன்.
இளம் வீரர்களுக்கு எவ்விதத் தயக்கம் இன்றி பயிற்சியளிக்கத் தயார் என்றார்.












Click it and Unblock the Notifications