"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
Subscribe to Oneindia Tamil
பட்டாசுத் தொழிற்சாலையில் தீ: 3 பெண்கள் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உடல் கருகி இறந்தனர்.
சாத்தூர் அருகே உள்ளது செவல்பட்டி கிராமம். இங்கு இயங்கி வரும் அய்யன் பட்டாசுத் தொழிற்சாலையில் சனிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. தீபரவி அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளிலும் பற்றிக்கொண்டது. இதனால் அங்கு வெடிகள் பயங்கரமாக வெடித்துச் சிதறின.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த குருபாக்கியம் (17), தனலட்சுமி (30), காளீஸ்வரி (19) ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி இறந்தனர்.
இச்சம்பவத்தில் முத்துலட்சுமி என்ற பெண் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் கட்டடம் தரைமட்டமானது.












Click it and Unblock the Notifications