For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கர்நாடகா-தமிழ்நாடு இணைந்து நடத்தும் -மா-பெ-ரும் ரத்ததான முகாம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:

தமிழ்நாடு கர்நாடக மாநிலங்கள் சேர்ந்து நடத்தும் ரத்த தான முகாம் வரும் ஜூன் 28 ம் தேதி ஓசூர் பஸ் நிலையத்தில் நடக்க உள்ளது.

இதுகுறித்து கர்நாடகா ரத்த தான அசோசியேஷன் தலைவர் ராஜூ சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இணைந்து ரத்ததான முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் பஸ்நிலையத்தில் இந்த ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.இதில் கர்நாடகத்திலிருந்து 3000 க்கும் மேற்பட்ட தன்னார்வ ரத்த தான வங்கிகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜூன் 28 ம் தேதி இந்த ரத்த தான முகாம் நடக்கவுள்ளது.

ரத்ததானம் அளிப்பதன் மூலம் இந்தியா முழுவதும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில்இவ்வளவு பெரிய முகாம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை.

தமிழ்நாட்டிலுள்ள மக்களும் கர்நாடகத்தைச் சேர்ந்த மக்களுக்கு ரத்த தானம் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

ஓசூரில் உள்ள லயன்ஸ் கிளப் மற்றும் கர்நாடக மாநில ரத்த தானக் கவுன்சில் ஆகிய இரண்டும் சேர்ந்து இந்த ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X