தமிழகத்தில் இன்று
காவிரிப் பிரச்சனை: -க-ரு-ணா-நி-தி-யை கு-றை சொல்-கி-றார் கெளடா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரிப் பிரச்சனையை எடுத்துக் கூறி தீர்வு காண தமிழக முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார்என்று முன்னாள் பிரதமரும் மற்றும் ஜனதா தளம் (எஸ்) தலைவ-ரு-மா-ன எச்.டி.தேவே கெள-டா குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் பிரதமராக இருந்த போது இந்தியாவுக்கும், பங்களாதேஷூக்கும் இடையே 40 வருடங்களாக இருந்த கங்கா நீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன்.
அந்த நேரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி நீர் பிரச்சனையை எடுத்துக் கூறி தீர்வு காணும் படி வலியுறுத்தியிருந்தால் கண்டிப்பாய் அப்பிரச்சனையை தீர்த்துவைத்திருப்பேன் என்றார்.
மத்தியில் தேவேகெளடா பிரதமராக இருந்தபோது காவிரிப்பிரச்சனையை அவர் தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கான முயற்சியில்ஈடுபடவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு பதிலளித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
யு.என்.ஐ.