தமிழகத்தில் இன்று
கி-ருஸ்-த-வர்-கள் -மீ-தா--ன தாக்-கு-தல்: தி--ச -தி-ருப்-பு-கி-றாரா அத்-வா-னி?
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய கிளர்ச்சி அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிகூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமை பெருகி விட்டன. ஆந்திராவில் சிலுவைகள், கல்லறைகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.பாதிரியார்களே வெளியேறுங்கள் என்ற -முழக்கம் கிளம்பியுள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து இதை எதிர்த்துகண்டனங்கள், கிளர்ச்சிகள் -நடத்துவோம்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் சில அமைப்புகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தியும், மதமாற்றத்திற்கு பதிலடியாக பாதிரியார்களைகொலை செய்தும் வருகின்றன. ஒரிசாவில் ஸ்டெய்ன்ஸ், அவரது குழந்தைகள் உயிரோடு எ-ரிக்கப்பட்டதையும் தாண்டி,ஆந்திராவில் பல இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் -நடந்துள்ளன.
ஆனால், இவர்களை குற்றமற்றவர்களாக சித்தரிக்க உள்துறை அமைச்சர் அத்வானி -முயல்கிறார்.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின-ரின் செயல் என்று பாஜகவை சேர்ந்த வெங்கையா -நாயுடு திசை திருப்புகிறார். அதை ஆந்திர-முதல்வர் சந்திரபாபு -நாயுடு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எனவே சிறுபான்மையினருக்கு எதிரான வன்றையை தடுக்க நாடு தழுவிய கிளர்ச்சியும், கண்டன-மும் தேவை என்று கூறியுள்ளார்வீரமணி.