தமிழகத்தில் இன்று
திண்டிவனம் ராமமூர்த்தியை சந்-தித்-தார் இளங்கோவன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளமுன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியை, தமிழககாங்கிரசின் புதிய தலைவர் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட தலைமை மாற்ற்த்திற்கு பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் முறை.
புதிய தலைவரை ஏற்க மாட்டேன் என்று அறிவித்து விட்டு, அதே கையோடு கட்சிஅலுவலகத்தையும் காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு போய்விட்டவர் திண்டி வனம்ராமமூர்த்தி.
கட்சி அலுவலகத்தை காலி செய்த கோபத்தில் முன்னாள் தலைவர் என்ற முறையில்அவரை சந்திக்க மறுத்து விட்டார் இளங்கோவன்.
இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சநதித்துக் கொண்டனர். நெஞ்சு வலிகாரணமாக தனியார் மருத்துவமனையில் திண்டிவனம் ராமமூர்த்தி சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு திரும்பியுள்ளார் இளங்-கோ-வன்.












Click it and Unblock the Notifications