அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
நாங்-க-ள் தான் இரண்டாவது பெரிய கட்சி --என்-கி-ற-து பா.ம.க
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டமன்றத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் கூட நாற்பது ஐம்பது இடங்களைகைப்பற்றுவோம் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவிததார்.
பண்ருட்டியில் நடந்த பா.ம.க. நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:
பா.ம.க. வை பற்றி டெல்லியில் வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழ்,
"பி எம் கே இஸ் தி தேர்ட் பவர்புல் பார்ட்டி" என்று எழுதியுள்ளது. இன்றையச்சூழ்நிலையில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ம.க. திகழ்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் கூட 40 அல்லது 50இடங்களை வெல்வோம். ஆனால் தனியாக நிற்க மாட்டோம். 2006ல் முதலாவதுபெரிய கட்சி என்ற இடத்தை நிச்சயம் பிடிப்போம்.
2001ல் பாண்டிச்சேரியில் முதலாவது இடத்தைப் பிடித்து ஆட்சி அமைப்போம். அங்குபா,ம.க. ஆட்சி அமைக்க எல்லா கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன.
கடலூர் மாவட்டம் புளியங்குடியில் தலித்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்எந்த சமுதாயத்தினர் காரணமாக இருந்தாலும் தூக்குத் தண்டனை தர வேண்டும்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பை த.மா.கா. வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்ஆதரிக்கின்றன. த.மா.கா.
கூட்டணியால்தான் அவர்களுக்கு தெம்பு வந்துள்ளது. வன்முறையாளர்களைவளர்க்காதீர்கள் என்று அக்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.