தமிழகத்தில் இன்று
டிஎஸ்பி கற்பழித்த மைனர் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்-த-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லூதியானா:
பஞ்சாப்பில் போலீஸ் டிஎஸ்பி தன்னைக் கற்பழித்ததாகக் குற்றம்சாட்டியுள்ள மைனர் பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதுதொடர்பாக இவ்வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க செயல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயல்கமிட்டித் தலைவர் குர்தீப் சிங் கூறியதாவது:
பஞ்சாப் போலீஸ் இலாகாவில் டிஎஸ்பி யாகப் பணிபுரிந்து வருபவர் அசோக் பூரி. இவர் ஓராண்டுக்குமுன் லூதியானா பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் ஒருவரின்சொத்துப் பிரச்சனை குறித்து விசாரித்து வந்தார்.
அப்போது வழக்கு தொடர்பாக தன் உறவினர்களுடன் இவரது வீட்டுக்கு வந்த 16 வயது சிறுமியை அவர் கற்பழித்தார்.
இதுகுறித்து எதுவும் தெரியாதது போல் இருந்து விட்டார்.
இவரால் கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் தன்னைக் கற்பழித்ததாக டிஎஸ்பி மீது வழக்கு தொடர்ந்தார். மேலும் தன் குழந்தைக்கு டிஎஸ்பியின் சொத்தில் பங்கு தருமாறும் வழக்குத்தொடர்ந்தார்.
இந்தக் கொடுமை தொடர்பாக நாங்கள் முதல்வரைச் சந்திக்க உள்ளோம். இந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு குர்-தீப் சிங் கூறினார்.