For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர் அருகே மோதல்: போலீஸார் மீது த.மு.மு.க. குற்றச்சாட்டு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:

தமிழத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அருகே உள்ள லப்பைக்காடு கிராமத்தில் இருசமூகத்தினரிடையே சனிக்கிழமை நடந்த மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தில் பல வீடுகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அதற்குபோலீசாரின் அஜாக்ரதையே காரணம். தகுந்த நேரத்தில் அவர்கள் நடவடிக்கைஎடுத்திருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும என தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (த.மு.மு.க.) குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக் கழகத்தின் பொதுச் செயலாளர் சலாலுதீன் கூறியதாவது:

இம் மோதல் தொடர்பாக 34 அப்பாவி முஸ்லிம் மதத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறையில் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் பெண்கள்கொடுமைப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இச்சம்பவம்குறித்து விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றார்சலாலுதீன்.

இவ் வழக்கில் போலீஸார் மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீதுமனித உரிமை கமிஷனிடம் புகார் கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்துக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் வந்துசென்றதற்குப் பிறகுதான் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதாகவும் முஸ்லீம் மக்களுக்குதகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X