தமிழகத்தில் இன்று
கோவை கு-டி-நீர் திட்-டத்-துக்-கு 22 -காடி ஒ-துக்-கீ-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மாவட்டத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்டக்கலெக்டர் சந்தானம் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டம் 20 அம்சத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக -முன்னணி வகித்துவருகிறது. போலியோ ஒழிப்புத் திட்டத்தில் -நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 7 ஆயிரம் குழந்தைகளுக்குகூடுதலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்ட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் அரசு 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 59 டவுன்பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு 2.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அடிப்படை வசதிகளுக்காக ரூ.52.8 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடசித்தூர், கண்ணமநாயக்கனூர் ஆகிய இடங்களில் இரண்டு சமத்துவபுரங்களைஏற்படுத்த அரசு டிவு செய்துள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications