தமிழகத்தில் இன்று
இந்திய சாஃப்ட் வேர் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்புப் பணிக்குழு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
இந்திய சாஃப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்பு பணிக் குழு (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்)ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சாஃப்ட்வேருக்கு சர்வதேச அளவில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது என்றுஇந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்மூத்த இயக்குநர் மேத்தா தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஜி.ஆர்.டி தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடந்த வர்த்தக வளர்ச்சியில் தகவல்தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் இன்டர்நெட்டின் உபயோகம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 20 லட்சம் வெப்பக்கங்கங்கள் கூடிக் கொண்டே உள்ளது. இதுவரை 1.8 பில்லியன் வெப் பக்கங்கள் உள்ளன. 30 கோடி மக்கள்இன்டெர்நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 40 சதவீத மக்களும், ஐரோப்பிய நாடுகளில் 13சதவீதம், இந்தியாவில் 0.2 சதவீதத்தினரும்ம், சீனாவில் ஒரு சதவீதத்தினரும் இன்டர்நெட்டைப் பயன்படுத்திவருகின்றனர்.
இ.காமர்ஸ் வர்த்தகம் இந்தியாவில் தற்போது 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவில் நடந்து வருகிறது. இதுஅடுத்த 8 ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடியாக உயரும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்திய சாஃப்ட்வேர்தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின், மத்திய கிழக்கு நாடுகள்,ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் இந்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை உள்ளது.
மேலும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாஃப்ட்வேர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க அரசுமுன்வந்துள்ளது. இந்திய சாஃப்ட்வேர்களின் அளவை உயர்த்த சிறப்பு பணிக்குழு ஒன்றை பிரதமர் வாஜ்பாய்அறிவித்துள்ளார். இந்த பணிக் குழு, வரும் 2008-ம் ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன்டாலராக உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆராயும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 1 முதல் 3 சதவீதம் வரை அரசு இயந்திரங்களை கம்ப்யூட்டர்மயமாக்கபட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார் மேத்தா.
விழாவில் ஜி.ஆர்.டி.அறிவியல் கல்லூரியின் தாளாளர் பத்மநாபன், முதல்வர் முருகன், ஜி.ஆர்.டி. மேலாண்மைநிறுவன இயக்குநர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications