அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய "சாப்ட்வேர் பார்க்":
ஜூலை 4-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா (டைடல் பார்க்), ரூ.338 கோடி செலவில் சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைபிரதமர் வாஜ்பாய் ஜூலை 4-ம் தேதி திறந்து வைக்கிறார்.
15 ஏக்கரில் சுமார் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இப் பூங்கா குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் ஆர். கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜூலை 4-ம் தேதி நடைபெறும் துவக்க விழாவில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் கலந்து கொள்கிறார்.
பூங்காவின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் வங்கிகள், கடைகள், ஹோட்டல்கள், கலந்தாய்வுக் கூடங்கள், வணிக மையங்கள் ஆகியவை இருக்கும்.இரண்டாவது தளம் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா சொலியூஷன், டாடா கன்சல்டன்சி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை ஏற்கனவேதங்கள் அலுவலகங்களை அங்கே நிறுவியுள்ளன.
இப் பூங்காவின் 70 சதவீத இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 30 சதவீத இடம் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. குறைந்தபட்சம் 4ஆயிரம் சதுர அடி முதல் அதிகபட்சம் 90 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவில் அலுவலகங்களை இங்கு நிறுவமுடியும்.
திட்ட முதலீடு அதிகமாகாமல் குறிப்பிட்ட காலத்துக்கு 12 வாரங்களுக்கு முன்பே இப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பப் பூங்காவில் உலகிலேயே 3-வது பெரிய அளவில் நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வி.எஸ்.என்.எல், மற்றும்தொலைத் தொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் மின் இணைப்புக்காக இப் பூங்காவுக்கென தனியாக 110 கிலோவாட் மின் சக்தி திறன் கொண்ட சப்ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பப் பூங்காவின் மற்றொரு சிறப்பு, ஒரு மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரே தொழில்நுட்பப் பூங்கா இதுதான். மேலும், சென்னைவிமான நிலையத்திலிருந்து 20 நிமிடங்களில் இங்கு வந்து சேரமுடியும் என்றார் கோபால்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications