Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கே: பகல் கனவு நல்லதா? கெட்டதா?

ப: நல்லதுதான். நம்பிக்கையுடன் வாழ்வதற்கு வேறு என்னதான் வழி இருக்கிறது?

கே: நாட்டுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளையும், லஞ்சம் வாங்காத அரசுஅதிகாரிகளையும் என்று காணலாம்?

ப: லஞ்சம் கொடுக்க மறுக்கிற மனிதர்களை எந்த அளவுக்கு காண்கிறோமோ - அந்தஅளவுக்கு ஏற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளையும், அமைச்சர்களையும்காணலாம்.

கே: மத மாற்றத்திற்கு வறுமை காரணமல்ல; கீழ் ஜாதியினர் அனைவரையும் மேல்ஜாதியினராக மாற்றி விட்டால், மதமாற்றம் தானகவே மறைந்து விடும் என்றுவி.பி.சிங் பேசியிருப்பது பற்றி ...?

ப: பாதி உண்மை; தாழ்த்தப்பட்ட ஜாதி - வறுமை இரண்டும் சேரும் போதுதான்பெரும்பான்மையான மத மாற்றங்கள் நிகழ்கின்றன.இதில் ஒன்றில்லை என்றால்,மதமாற்றத்திற்கான வாய்ப்பும் குறைவாகத்தான் இருந்து வருகிறது.

கே: டெலிஃபோன் ஊழியர்களுக்கு இலவச டெலிஃபோன் வழங்குவதற்கு தடைவிதித்து, இடைக்கால உத்திரவை கேரள உ.யர் நீதிமன்றம் வழங்கியுள்ளதுபற்றி...?

ப: இது இடைக்கால உத்திரவு மட்டுமே. இறுதித் தீர்ப்பாக இதுவே அமையுமா என்பதுசந்தேகமே. இந்தத் திட்டத்தை ரத்து செய்வது நீதிமன்றம் மூலம் சாதிக்கக் கூடியகாரியமாக எனக்குத் தெரியவில்லை. இது அரசு செய்ய வேண்டிய காரியம்.

கே: கிங் கமிஷன் முன்பு, ஹான்ஸி குரோனியே அளித்துள்ள வாக்குமூலம்எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்தது?

ப: அவர் முன்னுக்குப் பின் முரணாக நிறையப் பேசியிருக்கிறார். அவருடையவாக்குமூலத்தை சல்லடை போட்டு சலித்துத்தான், உண்மையைக் கண்டறிய வேண்டும்.

கே: இத்தனை ஊழல் வழக்குகள் இருந்தும் துணிச்சலுடன் ஜெயலலிதா அரசியல்நடத்துகிறாரே? அதைப் பற்றி என்ன நின்ைகிறீர்கள்?

ப: ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். நெஞ்சுரம் இருக்கிறது.

கே: ராமசாமி படையாச்சி சிலை தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, உங்கள்கருத்து என்ன?

ப: சிலை வைக்கப் போவதில்லை - சிலைகளால் சண்டைகள்தான் வருகின்றன -என்றெல்லாம் பேசிய முதல்வர், இப்போது ராமசாமி படையாச்சி சிலை எழுப்பமுடிவெடுத்து விட்டார். ஓட்டு, அவருடைய நிலைக்கு வேட்டு வைத்து விட்டது.ஆனால் ஒன்று, இப்படியெல்லாம் செயல்பட்டால், பா.ம.க. ஓட்டை தன் பக்கம்இழுக்கலாம் என்ற அவர் கணக்கு பலிக்காது.

கே: மத்தியில் திரும்பவும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ்செல்வாக்கு பெறும் என்று நினைக்கிறீர்களா?

ப: ஏன் நடக்கக் கூடாது? பா.ஜ.க.ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால்,அப்போது காங்கிரஸின் வாய்ப்புகள் கூடும்.

கே: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.ஐ. மேற்கொண்டு வரும்நடவடிக்கைகள் குறித்து...?

ப: ஒரு நாள் கிரிக்கெட் மாதிரி வேகமாக ஆரம்பித்து , ஐந்து நாள் டெஸ்ட் மாதிரி,நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறது. டிரா ஆகிவிடுமோ என்னவோ!

கே: இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிப்பது அரசியலா?சினிமாவா?

ப: தெருவில் போகிற கார், பாதசாரி மீது சேற்றை வாரி இறைப்பது போன்ற பாதிப்பு -சினிமா பாதிப்பு; கார் பாதசாரி மீது மோதி அவர் கால், கையை ஒடிப்பது போன்றபாதிப்பு - அரசியல் பாதிப்பு.

கே: பிறருக்குச் செய்யும் உதவிகளில் எந்த உதவி சிறந்த உதவி?

ப: கடன் கொடுப்பதுதான். திரும்பி வராது. நிரந்தரமான உதவியாக இருக்கும்.

கே: பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸின் இப்போதைய அரசியல் நிலைபற்றி...?

ப: கால் - தி.மு.க. கூட்டணியில்; கை - மத்திய ஆட்சியில்;

கண் - அ.தி.மு.க. கூட்டணி மீது.

கே: மாட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறாரேஅஸாருதீன்?

ப: இன்றைய கிர்க்கெட் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கான அவருடையபேச்சு இது.

கே: இனி அடிக்கடி பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்கிறாரேஜெயலலிதா ...?

ப: இது ஒன்றும் புதிதில்லை. அவ்வப்போது அவர் இப்படி சொல்லியிருக்கிறார்.

கே: அகதிகளால் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பிருக்கிறதா? அதைத் தடுக்கஎன்ன செய்ய வேண்டும்?

ப: நிச்சயமாக பிரச்சனைகள் தோன்றத்தான் செய்யும். அகதிகள் முகாம்கள் சரிவரநிர்வாகிக்கப்படுவதுதான், இதைத் தடுப்பதற்கான வழி.

கே: மாதா, பிதா, குரு, தெய்வம் - என்கிறோம். ஆக பெண்தானே முதற்படிஇல்லையா?

ப: ஆமாம். தெய்வத்திலிருந்து மூன்று இடங்கள் விலகி இருப்பது பெண்தான் - என்றுஇந்தப் பழைய மொழி கூறுகிறது. தெய்வத்திற்கு ரொம்ப நெருக்கம் குரு; இரண்டாவதுஇடம் - பிதா, கடைசியில் மாதா! நியாயமே இல்லை! இதை மாற்ற வேண்டும்.

கே: பெண்களுக்குப் போதிய சீட் ஒதுக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று எம்.எஸ். கில் கூறியுள்ள யோசனை குறித்து என்னநினைக்கிறீர்கள்?

ப: விஷத்தை விஷத்தால் முறிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல்கட்சிகளின் அந்தஸ்தை, பெண் உரிமையினால் முறிக்க வேண்டும் - என்று கில்நினைக்கிறார் போலிருக்கிறது.

கே: துக்ளக் சோ எங்களைத் தாக்கிப் பேசுகிறார். நீங்கள் சிங்களவர்களுக்குக்கைக் கூலியா என்று கேட்பதற்கு எத்தனை நாளாகும்? என்று வைகோகேட்கிறாரே?

ப கேட்கட்டுமே! அப்படியே சோ, அமிர்தலிங்கத்தின் கைக் கூலியா?யோகேஸ்வரனின் கைக்கூலியா? பத்மநாபாவின் கைக் கூலியா? விடுதலை ப்புலிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் கைக்கூலியா?என்றெல்லாம் அவர் கேட்க வேண்டும். அப்போதுதான் அவரவருடைய கேள்விமுழுமை பெறும்.

கே: சந்திரிகா அமைக்கும் வடக்கு, கிழக்கு மாகாண இடைக்கால அரசுதிட்டத்தை புலிகள் ஏற்பார்களா?

ப: ஏற்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்றால், அதைக் கெடுக்கும்எண்ணத்தில்தான் ஏற்பார்கள் என்பது என் கருத்து . அவர்கள் நாடுவது - தங்களுக்குஅடிமைப்பட்ட ஒரு பிரதேசம். தேர்தல், ஜனநாயகம் என்பதெல்லாம் அவர்களுக்குசரிப்பட்டு வராது.

கே: கல்வி, வேலை, பணம் - எது மனிதனுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது?

ப: கல்வி, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது; வேலை, பணம்கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது; பணம், வசதியாக வாழ முடியும் என்றநம்பிக்கையைத் தருகிறது - அது தான் தன்னம்பிக்கை; மற்ற நம்பிக்கைகள் வெறும்"ப்ரிலிமினரி நம்பிக்கைகள்.

கே குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர், மேல் முறையீடுசெய்தாலும் வேட்பாளராக நிற்க அவரை அனுமதிக்க முடியாது என்று தேர்தல்கமிஷன் எடுத்துள்ள முடிவு குறித்து..,?

ப: நீதிமன்றம் ஒருவருக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கிறது - என்று வைத்துக்கொள்வோம். தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழப்பார்... அவர் மேல்முறையீடு செய்து விடுவதால் மட்டும், இந்தத் தகுதி இழப்பு நீங்கி விடாது.

ஆனால், மேல் முறையீடு செய்யும் போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட்டின் தீர்ப்பையே நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம்; அப்படி நடந்தால், அந்தத்தீர்ப்பின் விளைவுகள் அந்தரத்தில் தொங்கும்; அந்த நிலையில் தகுதியின்மையும்நிறுத்தி வைக்கப்படும் - என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒரு பிரபல வக்கீலும்,முன்னாள் அமைச்சருமான முக்கியஸ்தரும் இப்படித்தான் கூறுகிறார்.

கே: "சிங்களவர்களின் பூர்வீகம் ஒரிஸ்ஸா என்று கூறும் இல. கணேசனின் கருத்துபற்றி...?

ப: ஈழம் என்பதே ஈழவர்களைக் கொண்ட கேரளத்தைத் தான் நினைவு படுத்துகிறதேதவிர, தமிழகத்தை அல்ல என்று ஒருவர் கூறுகிறார். "சிங்களவர்கள்ஒரிஸ்ஸாக்காரர்கள் என்கிறார் கணேசன். இது பற்றிய விவரங்கள் எனக்குத்தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+