தமிழகத்தில் இன்று
பிஜி: புரட்சிக்காரர்களுக்கு சாப்பாடு, குடிநீர் "கட் - ராணுவம் முடிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிடித்து வைத்துள்ள பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பிணைக் கைதிகளையும் விடுவிக்க மறுத்துவிட்டபுரட்சிக்காரர்களுக்கு சாப்பாடு, குடிநீர் சப்ளையை நிறுத்துவிட ராணுவம் முடிவு செய்துள்ளது.
பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. பிஜியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலானபுரட்சிப் படையினர் பிஜி நாடாளுமன்றத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி,அமைச்சர்கள் உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
பின்னர் பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. புரட்சிப் படையினருக்கும்,ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பலனாக பிணைக் கைதிகளில் பலர்விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் புரட்சிக்காரர்கள் பிடியில் உள்ளனர்.
பிஜியில் பிஜியைச் சேர்ந்த ஒருவர் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படும் வரை பிணைக் கைதிகளைவிடுவிக்கமாட்டோம் என்று புரட்சிக்காரர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து பிஜியில் அடுத்த இரண்டுஆண்டுகளுக்குத் தனது ஆட்சி தொடரும் என்று அறிவித்த ராணுவம், புரட்சிக்காரர்கள் சரணடைய 24 மணி நேரம்கெடு விதித்தது.
கெடு புதன்கிழமை பிற்பகலுடன் முடிவடைந்தாலும், பிணைக் கைதிகளைப் புரட்சிக்காரர்கள் விடுவிக்கவில்லை.எதையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக புரட்சிப் படைத் தலைவர் ஸ்பீட் அறிவித்துவிட்டார்.
இந் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஒருவார காலத்தில் ஜனநாயகரீதியில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, தங்களது உத்தரவை மதிக்காத புரட்சிக்காரர்களை தனிமைப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.தற்போது அவர்கள் இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ராணுவம் அறிவிக்கஉள்ளது.
புரட்சிக்காரர்களுக்கு உணவு, குடிநீர் சப்ளையை நிறுத்துவதுடன் நாடாளுமன்றக் கட்டடத்துக்கான மின்இணைப்பைத் துண்டிக்கவும் ராணுவம் முடிவு செய்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹோவர்டுபோலிடினி தெரிவித்தார்.
இதுவரை தனது அதிகாரத்தை ராணுவம் பயன்படுத்தவில்லை. இனிமேலும் ராணுவம் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தாமல் இருப்பது புரட்சிக்காரர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.
பிஜியில் ஏற்பட்டள்ள இப் பிரச்சினையால் அந் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.நாட்டின் முக்கிய உற்பத்தியான சர்க்கரை உற்பத்தி தடைபட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications