தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாண்டி முதல்வர் போட்டியிடும் தொகுதியில் வாக்குபதிவு தொடங்கியது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஏனாம் சட்டசபைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்களே ஓட்டுப்போட வந்திருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 17,588 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் உள்ள 18 வாக்குச்சாவடிகளில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மூலம்வாக்குப்பதிவு நடக்கிறது. புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சண்முகமும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கங்காதர் பிரதாப் ஆகியோரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications