தமிழகத்தில் இன்று
ஈரோடு மாநாடு: கருணாநிதி பங்கேற்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஈரோட்டில் சனிக்கிழமை நடக்கும் மதிமுக மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் நிகழ்ச்சிகள் குறித்து தமிழக அரசு
வெளியிட்ட அறிக்கை:
ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறையில் நடைபெறும் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் தொடக்க விழா, மஞ்சள் வளாகம் அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இரவு 7 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
2-ம் தேதி சென்னை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். 3-ம் தேதி சென்னை வரும் பிரதமர் வாஜ்பாயை விமான நிலையத்தில்வரவேற்கிறார்.
4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தரமணி டைடல் மென்பொருள் பூங்கா திறப்பு விழாவில் பேசுகிறார்.
12-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறும் கவிஞர் வைரமுத்து கவிதைகள் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார்.