தமிழகத்தில் இன்று
"ஐ லவ் யூ வைரஸ் அனுப்பிய வாலிபர் விடுதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மணிலா:
ஈ மெயில் மூலம் "ஐ லவ் யூ கம்ப்யூட்டர் வைரசை பரப்பி கைதான பிலிப்பைன்ஸ் வாலிபர் ரமோனஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீதான கம்ப்யூட்டர் குற்றங்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஐ லவ் யூ வைரசால் பல கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தது.கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
அமெரிக்க உளவுப்படை சர்வதேச போலீஸ் ஆகியோரது உதவியுடன் நடந்த விசாரணையில் இந்த வைரஸ் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்றுகண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸை அனுப்பியவர் வங்கி ஊழியர் ரியோனல் ரமோனஸ் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு உதவியாக இருந்த அவரது காதலியையும்,அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்நாட்டு சட்டப்படி கம்ப்யூட்டர்தொடர்பான குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications