தமிழகத்தில் இன்று
அத்வானி வருகை உ-றுதி-யானது
சென்னை:
ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி ஞாயிற்றுக்கிழமை காலை 9.20மணிக்கு சென்னை வருகிறார்.
வைகோ மாநாட்டுக்கு அத்வானி வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது பயணத் திட்டத்தை தமிழகஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்வானியின் பயணத் திட்டம் வருமாறு:
டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு வரும் அத்வானி, விமான நிலையத்தில் சிறிது நேரம்ஓய்வெடுக்கிறார்.
பின்னர் 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்கிறார். அங்கு மதிமுக மாநாட்டில் பேசுகிறார்.
மாலை 4 மணிக்கு ஈரோட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அத்வானியுடன் மதிமுக மாநாட்டில் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications