--மேட்ச் பிக்ஸிங்:முன்னாள் பிஸியோதெரபிஸ்ட் இரானியிடம் விசாரணை
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்பிஸியோதெரபிஸ்ட் அலி இரானியிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக மேட்ச் பிக்ஸிங், லஞ்ச ஊழல் உள்ளிட்டபல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந் நிலையில், சில தினங்களுக்கு முன் அலி இரானி ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் மேட்ச் பிக்ஸிங்கிலும், கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மற்றும் அரசியல்தலைவர்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அவர்குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அலி இானியிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணைநடத்தினர். அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சுமார் 2 மணி நேரத்துக்கும்மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அலி இரானி,விசாரணை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
யு.என்.ஐ.