தமிழகத்தில் இன்று
இருதய நோயாளியை எய்ட்ஸ் நோயாளியாக்-கி-ய ம-ருத்-து-வ--ம-னை
சென்னை:
பெங்களூர்-மதுரை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் இந்த நீட்டிப்பு அமலுக்கு வரும். தென்னக ரயில்வே பொது மேலாளர்கீர்த்திவாசன் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். முன்னதாகஇந்தஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையைஅவர் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் கீர்த்திவாசன் பேசுகையில், பெங்களூரிலிருந்து இரவு 9.15-க்குக்கிளம்பும் இந்த ரயில் மறு நாள் பிற்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியைசென்றடையும். மறு மார்க்கத்தில், மாலை 3.40க்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி,காலை 6.55 மணிக்கு பெங்களூர் போய்ச் சேரும்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்களின் நீண்ட நாள்கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,மதுரை-தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications