தமிழகத்தில் இன்று
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச வாஜ்பாய்க்-கு வாய்ப்-பு கிடைக்-கு-மா?
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்பு விடுக்கும்படி நாடாளுமன்ற சபாநாயகருக்குஅந்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம் டெர்மாட் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தைசபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் வாஜ்பாய் வருகிறார். அவரை, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைக்கவேண்டும்என்று சபாநாயகரைச் சந்தித்துப் பேசியபோது டெர்மாட் தெரிவித்தார்.
1994-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை அழைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டுக் கூட்டத்தில் பேச ஏற்பாடுசெய்தவர் டெர்மாட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நரசிம்மராவுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதல்இந்தியப் பிரதமர் வாஜ்பாய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications