தமிழகத்தில் இன்று
செத்-த-வன் வாயில் சங்-கு ...காங். கு-றித்-து வாழப்-பா-டி
மதுரை:
தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் நியமனத்தால் புத்துயிர் பெறாது. செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் காங்கிரஸ் கட்சிக்கு என்று வாழப்பாடிராமமூர்த்தி கூறினார்.
ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில்:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரே. அதனால் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுமா? என்கிற நிருபர்களின் கேள்விக்கு ,செத்தவன் வாயில் சங்-கு ஊதிய கதைதான் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் காங்கிரஸ் உடைந்து பலவீனம் அடைந்துவிட்டது. எனவே காங்கிரஸ் ஏற்கனவே இருந்தபலத்துக்கு வர முடியுமா என்பதுதான் பிரச்சனை.
முக்கியமாக சில அணுகுமுறைகளை காங்கிரஸ் மேலிடம் கையாள வேண்டும். டெல்லியில் இருந்து சட்டாம்பிள்ளைத் தனமாக மாநில தலைவரை நியமிக்கும்முறை நீங்க வேண்டும்.
மாநில தலைமை வளர்ச்சி பெறுவதை விட இந்த நிபந்தனைகளை கட்சி தலைமை ஏற்றால் இணைந்து மீணடும் பலம் பெறலாம். ஆனால் இதை கட்சிதலைமை ஏற்குமா? என்பது சந்தேகமே என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications