மேட்ச் பிக்ஸிங்கை ஒத்-துக் கொள்-ளும் வீரர்-க-ளுக்-கு மன்-னிப்-பு: அமைச்-சர்
கோயம்புத்தூர்:
மேட்ச் பிக்ஸிங்கில் தனக்குள்ள தொடர்பு பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வீரர்கள் மீதா-ன- வ-ழக்-கை ம-று பரி-சீ-ல-னை செய்-ய மத்தியஅரசு தயாராக உள்ளது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எஸ். -தின்-ஸா தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி செல்லும் வழியில் கோவையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர்கூறியதாவது:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டு மீது மக்களுக்கு மதிப்பு குறைந்துவிட்டது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பாகசிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பல வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேட்ச் பிக்ஸிங்கில் தங்களுக்கு உள்ள தொடர்பு பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வீரர்கள் அனைவருக்கும் சலுகை காட்ட அரசு தயாராகஉள்ளது. அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதிலும், கிடைத்த தண்டனையைக் குறைப்பதிலும், சலுகை காட்டுவதிலும் மத்திய அரசு உதவும்.
சிபிஐ தனது விசாரணையை முடித்து இம் மாத இறுதியில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கருதுகிறேன். மேட்ச் பிக்ஸிங் குறித்து சிபிஐ விசாரணை நடந்துவரும் நிலையில், அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கிரிக்கெட்டுக்குப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மேட்ச் பிக்ஸிங் போன்றகுற்றச்சாட்டுகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிரிக்கெட்டைத் தவிர ஹாக்கி போன்ற விளையாட்டுக்களுக்கும் அவை அதிக முக்கியத்துவம்தரவேண்டும் என்றார் தின்-ஸா.
யு.என்.ஐ.













Click it and Unblock the Notifications