தமிழகத்தில் இன்று
கார் உற்பத்தியைக் குறைக்க பியட் இந்தியா நிறுவனம் முடிவு
டெல்லி:
உனோ, சியானா ஆகிய கார்களின் உற்பத்தியையும், விற்பனையையும் குறைத்துக் கொள்ள பியட் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பியட் ஆட்டோ ஸ்பா நிறுவனம், இந்தியாவில் பியட் உனோ, பியட் சியானா ஆகிய இரு கார்களைத்தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
விரைவில் பியட் பாலியோ என்ற புதிய ரகக் காரையும் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. இந் நிலையில், பியட் நிறுவன கார்களின் விற்பனையில்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 830 கார்கள் மட்டுமே விற்பனையாயின. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை(1,565) விட 46.9 சதவீதம் குறைவாகும். மே மாத விற்பனையை விடவும் ஜூன் மாதம் கார்கள் விற்பனை குறைந்துவிட்டது.
இப்படி கார்களின் விற்பனை குறைந்துவிட்டதை அடுத்து, புதிய ரக காரை அறிமுகம் செய்யும் வரை மாதம் 1000 முதல் 1500 கார்களை மட்டும்உற்பத்தி செய்ய பியட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
யு.என்.ஐ.